அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
‛பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி இப்படம் பேசுகிறது. விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களாமல் மட்டுமே நடப்பதில்லை. சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
டிக்டாக்கில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில பெண்கள் பேசுகிற விதமும், நடக்கும் செயலும் சகிக்க முடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். மொபைல் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம்தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்போனில் புல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்புதான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.
நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி, மதகுருமார்களாக, சாமியார்களாக, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமை ஒரு நாள் செய்தியாக கடந்து விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.