மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சில தெலுங்கு மீடியாக்களில் இப்படத்தை ஓடிடி தளத்தில் 'பணம் செலுத்தி பார்க்கும் முறை' மூலம் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவற்றை படக்குழு மறுத்துள்ளதாம்.
திட்டமிட்டபடி ஜனவரி 7ம் தேதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்களாம். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வியாபாரமும் மிகப் பெரும் அளவில் நடந்துள்ளது.
இன்று மாலை சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.