மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சில தெலுங்கு மீடியாக்களில் இப்படத்தை ஓடிடி தளத்தில் 'பணம் செலுத்தி பார்க்கும் முறை' மூலம் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவற்றை படக்குழு மறுத்துள்ளதாம்.
திட்டமிட்டபடி ஜனவரி 7ம் தேதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்களாம். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வியாபாரமும் மிகப் பெரும் அளவில் நடந்துள்ளது.
இன்று மாலை சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.