காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் பெற்ற இளம் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். கடந்த 2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் 'ஆனந்தி' என்ற அந்த கதாபாத்திரத்திற்காக முதல் படத்திலேயே பல விருதுகளையும் பெற்றார். அதன்பிறகு 'அங்காடி தெரு' படத்தின் மூலம் நன்கு அறிமுகத்தை பெற்றார். பின்னர் அவர் நடித்த 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி' பேரன்பு உள்ளிட்ட படங்கள் வெற்றிப்பெற்றன. ஆனால் சமீபகாலமாக படங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில் அஞ்சலியுடன் அங்காடி தெரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிளாக் பாண்டி அஞ்சலி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பே நல்ல நண்பர்கள். சேர்ந்து தான் நடன பயிற்சி எடுத்தோம். சமீபத்தில் ஒரு முறை மலேசியா போகும்போது அங்கு தான் அவளை பார்த்தேன். பயங்கரமாக திட்டினேன். ஏண்டி உனக்கு போன் பண்ணனும் என்றால் மேனேஜரை கூப்பிட்டு தான் எங்களிடமே பேச சொல்லுவியா? என்று கேட்டேன். பழைய நட்பு அடிப்படையில் அப்படி உரிமையோடு அவளிடம் பேசினேன். உடனே அவள் தன்னுடைய போன் நம்பரை கொடுத்து கூப்பிடு என்று சொன்னார். நானும் போன் பண்ணினேன். தொடர்ந்து 4 முறை கூப்பிட்டேன். ஆனால், அவ எடுக்கவே இல்லை. மீண்டும் அவாய்ட் பண்ண ஆரம்பித்தது தெரிந்தது. பொதுவாகவே அந்த இடத்திற்கு போனதுக்கப்புறம் அவர்களுக்குள் அந்த மாதிரி செய்ய தோணுதோ? என்று தெரியவில்லை என்று கூறினார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




