நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் கானா பாடகர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்து வருகிறார். இதனால் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் சில கானா பாடகர்களின் வரம்புகள் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் ஒரு பாடல் மனதை வலிக்க செய்கிறது. பெரம்பூரை சேர்ந்த சரவணன் (சரவெடி சரண்) என்பவர் மேடையில் ஒரு கானா பாடலை பாடுகிறார். அந்த பாடல் வரிகள் சிறுமிக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்போம். அதன்பிறகு அவளை வாந்தி எடுக்க வைப்போம் என்கிற பொருள் தருகிற மாதிரியான பாடல் வரிகளை பாடி உள்ளார்.
இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரவே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் பாடகர் சரவணனை கைது செய்துள்ளனர்.
பின்னர் போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் அளித்த சரண், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தான் பாடிய பாடலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சரண், பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பாடியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.