தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சமூக வலைத்தளங்களில் ஒரு அடிப்படை மரியாதை கூட இல்லாமல் பலர் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை 'டிரோல்' செய்பவர்களின் எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகம்.
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியெல்லாம் தரக்குறைவான விமர்சனங்களையும் பலர் முன்வைப்பதுண்டு. அப்படி ஒரு ரசிகர் சமந்தாவை 'டேக்' செய்து, “விவகாரத்து பெற்ற, இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிடமிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்” என 'டிரோல்' செய்திருந்தார்.
அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்த சமந்தா, “உங்கள் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்திருந்தார். சமந்தா ரிடுவீட் செய்ததைத் தொடர்ந்து அந்த கணக்கு வைத்திருந்த நபர் உடனடியாக தன்னுடைய கணக்கை டெலிட் செய்துவிட்டார். டுவிட்டர் தளங்களில் இப்படித்தான் போலியான கணக்குகளை ஆரம்பித்து தரமற்ற முறையில் பலர் செயல்பட்டு வருகின்றனர்.