விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் |
சமூக வலைத்தளங்களில் ஒரு அடிப்படை மரியாதை கூட இல்லாமல் பலர் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை 'டிரோல்' செய்பவர்களின் எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகம்.
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியெல்லாம் தரக்குறைவான விமர்சனங்களையும் பலர் முன்வைப்பதுண்டு. அப்படி ஒரு ரசிகர் சமந்தாவை 'டேக்' செய்து, “விவகாரத்து பெற்ற, இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிடமிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்” என 'டிரோல்' செய்திருந்தார்.
அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்த சமந்தா, “உங்கள் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்திருந்தார். சமந்தா ரிடுவீட் செய்ததைத் தொடர்ந்து அந்த கணக்கு வைத்திருந்த நபர் உடனடியாக தன்னுடைய கணக்கை டெலிட் செய்துவிட்டார். டுவிட்டர் தளங்களில் இப்படித்தான் போலியான கணக்குகளை ஆரம்பித்து தரமற்ற முறையில் பலர் செயல்பட்டு வருகின்றனர்.