20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
டிக்கிலோனா படத்தை அடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார் சந்தானம். அந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டண வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்புக்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் சந்தானம்.