ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள தமிழ் நடிகையான சாய் பல்லவியை தெலுங்குத் திரையுலகம் தக்க வாய்ப்புகளைக் கொடுத்து அவரைக் கொண்டாடி வருகிறது.
நானி நாயகனாக நடிக்கும் 'ஷியாம் சிங்கா ராய்' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாய் பல்லவி. அப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுவதற்காக மேடையேறிய சாய் பல்லவியை ரசிகர்கள் பேசவிடாமல் கரகோஷம் எழுப்பி அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாய் பல்லவி தெலுங்கில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொல்லி அவரை அழைத்தனர். அதனால், மிகவும் நெகிழ்ந்து போன சாய் பல்லவி மேடையில் கண் கலங்க ஆரம்பித்தார். கண்களில் வழியும் கண்ணீரோடு அவர் பேசினார்.
“உங்கள் முன்னால் இப்படி நிற்பதற்கு நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. இந்த அன்புக்கும், பாராட்டுகளுக்கும் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் நடிக்க என்னை விட திறமையான பலர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே சினிமாவில் நடிக்கவும், புகழ் பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்கிறேன்,” என்றார்.