நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்திருந்த பேச்சுலர் படம் கடந்த 3ம் தேதி வெளிவந்தது. சதீஷ்குமார் இயக்கிய இந்த படம் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசியது. ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது. மூன்றாவது வாரமாக ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிப்பு விழாவை படக்குழு நடத்தியது.
ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது: ஒரு படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது தயாரிப்பாளரும், இயக்குனரும் தான்.
சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சிலர் படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் 3வது வாரத்தைக் கடந்திருக்கிறது. மீடியாக்கள் தந்த அறிவுரைக்கும், விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. வெளியிடப்பட்ட கருத்துக்களில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்கிறோம். என்றார்.