'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி |

இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அதேசமயம் இசையிலும் பிஸியாக உள்ளார். ''இன்னொரு பாடலின் சாயல் வரும் போது, அதை மாற்றிக் கொள்வதில் தவறில்லை'' என, நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
வெயில் பட இசையமைப்பாளர் ஜி.வி., நினைத்த இடத்திற்கு தற்போது வந்து விட்டாரா?
ஆரம்பிக்கும் போது கனவு நிறைய இருந்தது. இப்போதைக்கு 10 சதவீதம் வந்து விட்டேன் என நினைக்கிறேன்; இன்னும் 90 சதவீதம் இருக்கு.
ஒரு பாடலை கேட்கும் போது, அது வேறு ஒரு பாடலின் சாயலாக இருப்பதை தவிர்க்க என்ன செய்யலாம்?
நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து கேட்க வைக்கலாம். சாயல் இருந்தால் 'நோட்ஸ்' மாற்றிக் கொள்வதில் தவறில்லை.
![]() |
![]() |
-நமது நிருபர்-




