ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர் தனய்யா, நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், தலையில் மல்லிகைப் பூ அணிந்து ஒரு மாடர்ன் தமிழ்ப் பெண் போல வந்தார் ஆலியா பட். “எல்லோருக்கும் வணக்கம்' என தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன்பு வந்த '2 ஸ்டேட்ஸ்' படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்தேன். சென்னை வருவது மகிழ்ச்சிதான். “ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தது உற்சாகமான ஒரு விஷயம். அதன்பின் என் மீது நிறைய பேர் அன்பு செலுத்தினார்கள். கனவு நனவாது போல் இருந்தது, டிரைலரைப் பார்த்த போது, என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
நிகழ்ச்சியில் ஆலியா பட் வந்து கலந்து கொண்டது பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' மலையாள டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஆலியா கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வரவில்லை என நினைத்தார்கள். மாறாக 'ஆர்ஆர்ஆர்' தமிழ் பட பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.