ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர் தனய்யா, நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், தலையில் மல்லிகைப் பூ அணிந்து ஒரு மாடர்ன் தமிழ்ப் பெண் போல வந்தார் ஆலியா பட். “எல்லோருக்கும் வணக்கம்' என தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன்பு வந்த '2 ஸ்டேட்ஸ்' படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்தேன். சென்னை வருவது மகிழ்ச்சிதான். “ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தது உற்சாகமான ஒரு விஷயம். அதன்பின் என் மீது நிறைய பேர் அன்பு செலுத்தினார்கள். கனவு நனவாது போல் இருந்தது, டிரைலரைப் பார்த்த போது, என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
நிகழ்ச்சியில் ஆலியா பட் வந்து கலந்து கொண்டது பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' மலையாள டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஆலியா கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வரவில்லை என நினைத்தார்கள். மாறாக 'ஆர்ஆர்ஆர்' தமிழ் பட பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.