அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
அண்ணாத்த படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் நடித்து கொடுத்தார் ரஜினி. ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஜினியின் நடிப்புக்கு பெயர் கொடுத்தாலும் தன் படம் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை என்று ரஜினி கவலையில் இருக்கிறார். எனவே அடுத்த பட கதை தேர்வில் கவனமாக இருக்கிறார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வந்தது. அதன்பின் பாண்டிராஜ் இயக்குவதாக சமீபத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது.
இதற்கிடையே ரஜினி, சில சீனியர் இயக்குனர்களையும் அழைத்து அடுத்த படத்திற்கான கதையை கேட்டுள்ளார். ஆனால் கதை கூறிய இயக்குனர்கள் அனைவருமே ஒன் லைனில் மட்டுமே கதையை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய எந்த கதையும் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
தனது அடுத்த படம் கண்டிப்பாக வெற்றிப் பெற்றே ஆக வேண்டும். அதேநேரம் நல்ல கதையும், விரைவில் படத்தை இயக்கி முடிக்கும் இயக்குனராகவும் இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாராம். அதனால் அதற்கு சரியான தேர்வாக முன்னணி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாராக தான் இருக்க முடியும் என்று முடிவு செய்துள்ள ரஜினி, விரைவில் ஒரு நல்ல கதையை தயார் செய்து கொண்டு வரும்படி கேட்டிருக்கிறாராம். அதனால் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாராக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ரஜினியின் இன்னொரு தேர்வாக இயக்குனர் சுந்தர்.சியும் இருக்கிறார் என்கிறார்கள். அவரிடமும் கதை கேட்டுள்ளாராம்.