ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் மாநாடு. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பட வெளியீட்டின் போது சில பிரச்னைகளும் நடந்தது. ஆனபோதிலும் அதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை படக்குழு கொண்டாடி வருகின்றனர். ரஜினி, சிவகார்த்திகேயன் என பல திரைநட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதில் மாநாடு படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . மாநாடு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது குற்றச்செயல், அனைவரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கட்டும் என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.