'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் மாநாடு. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பட வெளியீட்டின் போது சில பிரச்னைகளும் நடந்தது. ஆனபோதிலும் அதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை படக்குழு கொண்டாடி வருகின்றனர். ரஜினி, சிவகார்த்திகேயன் என பல திரைநட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதில் மாநாடு படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . மாநாடு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது குற்றச்செயல், அனைவரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கட்டும் என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.