சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழ் சினிமாவில் அம்மன் படங்களுக்கென்றே தனி சீசன் இருந்த காலம் உண்டு. கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அம்மன் வேடத்தில் நடித்தே புகழ்பெற்றார்கள். அம்மன் திருவிழா காலங்களில் அம்மன் படங்களை தியேட்டரில் மீண்டும், மீண்டும் வெளியிடுவார்கள். தொலைக்காட்சிகளில் பக்தி சீரியல்களின் வருகைக்கு பிறகு அம்மன் படங்கள் வெளிவரவில்லை.
இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வருகிறது. இதில் கவுசல்யா அம்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார். சாய்தேவ் இசை அமைக்கிறார், ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் கிருஷ்ணா கூறியதாவது: வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்? திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது. அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதை பக்தி கலந்து படம் விவரிக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவருகிறது. என்றார்.