மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ் சினிமாவில் அம்மன் படங்களுக்கென்றே தனி சீசன் இருந்த காலம் உண்டு. கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அம்மன் வேடத்தில் நடித்தே புகழ்பெற்றார்கள். அம்மன் திருவிழா காலங்களில் அம்மன் படங்களை தியேட்டரில் மீண்டும், மீண்டும் வெளியிடுவார்கள். தொலைக்காட்சிகளில் பக்தி சீரியல்களின் வருகைக்கு பிறகு அம்மன் படங்கள் வெளிவரவில்லை.
இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வருகிறது. இதில் கவுசல்யா அம்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார். சாய்தேவ் இசை அமைக்கிறார், ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் கிருஷ்ணா கூறியதாவது: வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்? திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது. அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதை பக்தி கலந்து படம் விவரிக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவருகிறது. என்றார்.




