இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலசிரியாக வலம் வருபவர் விவேகா. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள இவர், அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் முதன்முதலாக மலையாள படம் ஒன்றில் பாடல் எழுதியுள்ளார். பிரீசர் நம்பர் ஒன் என்கிற கிரைம் த்ரில்லர் படமான இது மலையாளத்தில் உருவானாலும் கூட இதிலும் தமிழில் தான் பாடல் எழுதியுள்ளார் விவேகா. காரணம் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் நடக்கும் போலீசாரின் புலன் விசாரணை காட்சிகளின் பின்னணியில் இடம் பெறும் பாடல் என்பதால் அதை தமிழிலேயே எழுதித்தர சொல்லிவிட்டார்களாம்.