என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , சம்மன் அனுப்பியது.
தனது துணிச்சலான கருத்துக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறார் நடிகை கங்கனா ரணவத், அதே அளவிற்கு அவருக்கு எதிர்ப்புகளும் உருவாகி வருகிறது. அவரது கருத்துக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்தாக பார்க்கப்படுவதால் எதிர்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கங்கனா ரணவத் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டதாக அவர் மீது டில்லி குருத்வாரா கமிட்டி போலீசில் புகார் அளித்தள்ளது. போலீசாரும் கங்கனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் டில்லியின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சட்டசபையில் நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்கு சட்டசபையின் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.