தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

பிரபல மலையாள பாடலாசிரியர் பிச்சு திருமலா இன்று(நவ., 26) காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பிச்சு திருமலா கடந்த சில நாட்களாகவே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் நாட்களை நகர்த்தி வந்தார்.
1972ல் பஜகோவிந்தம் என்கிற மலையாள படத்தின் மூலம் பாடலாசிரியாக நுழைந்த இவர் சுமார் நானூறு படங்களில் பணியாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இரண்டுமுறை கேரளா அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரே படமான யோதாவில் இவர் பாடல் எழுதியுள்ளார். மேலும் மோகன்லால் அறிமுகமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது இவர் தான்.