சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கே.பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து இயக்கிய படம் சித்து ப்ளஸ்டூ. இப்படத்தில் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் சாந்தினி. பாக்யராஜினி மோதிரக்கையில் குட்டு பட்டிருக்கிறோம். அதனால் பெரிய ஹீரோயினியாகி விடுவோம் என்று கனவு கண்டார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததால் அவரது கனவு நனவாகவில்லை. அதற்கடுத்தபடியாக அவர் நடித்த படித்துறை படம் இன்று வரை வெளியாகவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தியது கோடம்பாக்கம்.
இருப்பினும் வீட்டில் இருந்தபடியே இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு விடாமுயற்சி செய்து வந்தார் சாந்தினி. அதன்பலனாக நகுல் நடித்துள்ள நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இந்த படத்தில் கல்லூரி மாணவியான அவரை ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நகுல் காப்பாற்றுவது போன்ற கதையாம். அதனால் இருவரும் ரவுடிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடிக்கொண்டேயிருப்பார்களாம். ஆனால் அப்படி செல்லும்போது, பல இடஙகளில் தன்னை பற்றிக்கொண்டு ஓடி வரும் சாந்தினியை, எதிரிகளிடமிருந்து காப்பாற்ற அவரை தனது தோளில் தூக்கி எதிரிகளை பந்தாடியபடி சண்டை செய்வாராம் நகுல். அதனால் படப்பிடிப்பு முடிந்து ஒரு வாரம் வரை என் உடம்பு வலி தீரவில்லை என்கிறார் சாந்தினி.