சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இருவரும் சென்னையிலுள்ள பனையூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகியோர் மூலம் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 26 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் சினேகா. இது காரணமாக மாதந்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களின் அந்த வார்த்தையை நம்பி ஆன்லைன் மூலமாக ரூ. 25 லட்சம் ரூபாயும், ரொக்கமாக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்திருக்கிறார் சினேகா.
ஆனால் முதலீடு செய்த மே மாதத்தில் இருந்து இப்போது வரை மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாகவும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.