திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இருவரும் சென்னையிலுள்ள பனையூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகியோர் மூலம் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 26 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் சினேகா. இது காரணமாக மாதந்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களின் அந்த வார்த்தையை நம்பி ஆன்லைன் மூலமாக ரூ. 25 லட்சம் ரூபாயும், ரொக்கமாக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்திருக்கிறார் சினேகா.
ஆனால் முதலீடு செய்த மே மாதத்தில் இருந்து இப்போது வரை மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாகவும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.