மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது முதல் பாடலிலேயே இந்த உலகத்தைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அனிருத் இசையமைப்பில், தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இப்பாடல் யு டியுபில் வெளியானது. பாடல் வெளியான உடனேயே ரசிகர்களை ரசிக்க வைத்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலானது.
மொழி எல்லைகளைக் கடந்து இந்தப் பாடல் பலராலும் பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டது. இந்த ஒரு பாடலால் தனுஷுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
யு டியூப் என்ற வீடியோ தளத்தில் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்த்த முதல் பெருமை இந்த பாடலுக்கு உண்டு. அதன்பிறகே தமிழ் சினிமாவில் யு டியூப் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பலரும் யு டியூப் பக்கம் திரும்பினர்.
முதன் முதலில் 100 மில்லியன், 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல் என்ற பெருமையைப் பெற்றது. இந்த 'கொல வெறி' சாதனையை சீக்கிரமே முறியடித்து தற்போது 1000 மில்லியன் சாதனையைக் கடந்துள்ள 'ரௌடி பேபி' பாடலிலும் தனுஷின் பங்கு உண்டு.