டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது முதல் பாடலிலேயே இந்த உலகத்தைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அனிருத் இசையமைப்பில், தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இப்பாடல் யு டியுபில் வெளியானது. பாடல் வெளியான உடனேயே ரசிகர்களை ரசிக்க வைத்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலானது.
மொழி எல்லைகளைக் கடந்து இந்தப் பாடல் பலராலும் பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டது. இந்த ஒரு பாடலால் தனுஷுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
யு டியூப் என்ற வீடியோ தளத்தில் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்த்த முதல் பெருமை இந்த பாடலுக்கு உண்டு. அதன்பிறகே தமிழ் சினிமாவில் யு டியூப் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பலரும் யு டியூப் பக்கம் திரும்பினர்.
முதன் முதலில் 100 மில்லியன், 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல் என்ற பெருமையைப் பெற்றது. இந்த 'கொல வெறி' சாதனையை சீக்கிரமே முறியடித்து தற்போது 1000 மில்லியன் சாதனையைக் கடந்துள்ள 'ரௌடி பேபி' பாடலிலும் தனுஷின் பங்கு உண்டு.