தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது முதல் பாடலிலேயே இந்த உலகத்தைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அனிருத் இசையமைப்பில், தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இப்பாடல் யு டியுபில் வெளியானது. பாடல் வெளியான உடனேயே ரசிகர்களை ரசிக்க வைத்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலானது.
மொழி எல்லைகளைக் கடந்து இந்தப் பாடல் பலராலும் பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டது. இந்த ஒரு பாடலால் தனுஷுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
யு டியூப் என்ற வீடியோ தளத்தில் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்த்த முதல் பெருமை இந்த பாடலுக்கு உண்டு. அதன்பிறகே தமிழ் சினிமாவில் யு டியூப் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பலரும் யு டியூப் பக்கம் திரும்பினர்.
முதன் முதலில் 100 மில்லியன், 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல் என்ற பெருமையைப் பெற்றது. இந்த 'கொல வெறி' சாதனையை சீக்கிரமே முறியடித்து தற்போது 1000 மில்லியன் சாதனையைக் கடந்துள்ள 'ரௌடி பேபி' பாடலிலும் தனுஷின் பங்கு உண்டு.