மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது முதல் பாடலிலேயே இந்த உலகத்தைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அனிருத் இசையமைப்பில், தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இப்பாடல் யு டியுபில் வெளியானது. பாடல் வெளியான உடனேயே ரசிகர்களை ரசிக்க வைத்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலானது.
மொழி எல்லைகளைக் கடந்து இந்தப் பாடல் பலராலும் பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டது. இந்த ஒரு பாடலால் தனுஷுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
யு டியூப் என்ற வீடியோ தளத்தில் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்த்த முதல் பெருமை இந்த பாடலுக்கு உண்டு. அதன்பிறகே தமிழ் சினிமாவில் யு டியூப் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பலரும் யு டியூப் பக்கம் திரும்பினர்.
முதன் முதலில் 100 மில்லியன், 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல் என்ற பெருமையைப் பெற்றது. இந்த 'கொல வெறி' சாதனையை சீக்கிரமே முறியடித்து தற்போது 1000 மில்லியன் சாதனையைக் கடந்துள்ள 'ரௌடி பேபி' பாடலிலும் தனுஷின் பங்கு உண்டு.