சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அமலாபால் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதை அடுத்து இரண்டாம் தட்டு நடிகைகளுக்குகூட விஜய்யுடன் நாமும் டூயட் பாடிவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடிப்பவர் பிந்து மாதவிதான். நான் தெலுங்கு படங்களில் நடித்து வந்தபோதே விஜய்யின் தீவிர ரசிகை. அதனால் தமிழுக்கு நடிக்க வந்ததில் இருந்தே அவருடன் எப்படியும் டூயட் பாடி விட வேண்டும் என்ற ஆசை என் மனதில் அலைமோதிக்கொண்டே இருக்கிறது. சட்டம் ஒரு இருட்டறை படத்தை அவரது உறவினர் சினேகா பிரிட்டோ இயக்குகிறார் என்றதும் சம்பளத்தைப்பற்றிகூட பேசாமல் உடனே நான் கமிட்டானதற்கு அதுவும் ஒரு காரணம்.
மேலும், அப்படி அந்த படத்தில் நடித்தபோது, ஒரு நாள் ஸ்பாட்டுக்கு வந்த விஜய், எனது நடனத்தைப்பார்த்து ரொம்பவே ரசித்தார். அதோடு, பிரமாதமாக ஆடினாய் என்றும் கைகுலுக்கினார். அதனால் ஓரளவு விஜய்யை நான் நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன் என்று சொல்லும் பிந்துமாதவி, இப்போது தமிழில் பிசியாக நடித்து வரும் நான், விரைவில் தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்து விஜய் நடிக்கும் எதிர்கால படங்களில் அவருடன் ஜோடி சேராமல் ஆந்திராவுககு திரும்ப மாட்டேன் என்றும் மனஉறுதியுடன் பேசுகிறார்.