என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கன்னட முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த 29ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமார் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும், அவரது படத்தில் தமிழ் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். பல தமிழ் நடிகர்கள் அவருடன் நட்பாக இருந்தார்கள்.
புனித் ராஜ்குமார் சமாதிக்கு சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து சூர்யா நேற்று பெங்களூருக்கு சென்று புனித் ராஜ்குமார் சமாதியில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். சூர்யாவுடன் சிவராஜ்குமாரும் உடன் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா கூறியதாவது: புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிருந்து நெருக்கமானது. நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். என்றார்.