சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கன்னட முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த 29ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமார் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும், அவரது படத்தில் தமிழ் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். பல தமிழ் நடிகர்கள் அவருடன் நட்பாக இருந்தார்கள்.
புனித் ராஜ்குமார் சமாதிக்கு சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து சூர்யா நேற்று பெங்களூருக்கு சென்று புனித் ராஜ்குமார் சமாதியில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். சூர்யாவுடன் சிவராஜ்குமாரும் உடன் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா கூறியதாவது: புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிருந்து நெருக்கமானது. நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். என்றார்.