‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் உச்சபட்ச உயரம் 155 அடி. அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். தற்போது 142 அடிவரை நீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
125 ஆண்டுகள் மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். கேரளா இரண்டாக பிளந்துவிடும் என, கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர் கடிதம் எழுதினார். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும் என மலையாள நடிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் நடிகர் பிருத்விராஜ் #DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொருட்படுத்தாமல் 125 வருட அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருக்க காரணமோ மன்னிப்போ இல்லை! நாம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஒருபுறம் வைத்து எது சரியானதோ அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும், சிஸ்டம் சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம்! என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜின் இந்த கருத்துக்கு தமிழ் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு தோன்றியுள்ளது. நேற்று அவருக்கு எதிராக சில ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.