ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் அவரது காதல் கணவர் நாகசைதன்யாவும் சமீபத்தில் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து அறிவிப்பு வெளியான பின்னரும் கூட, அவர்களது பிரிவு எதனால், இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பல யூடியூப் சேனல்களில் தங்களுக்கு தோன்றியபடி செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் இரண்டு டிவி சேனல்கள் மற்றும் 3 யூடியூப் சேனல்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்தார் சமந்தா. இதனை அவசர வழக்காக கருதி முன்னுரிமை தந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் சமந்தாவின் வழக்கறிஞர்..
அதற்கு நீதிபதி, “அவதூறு வழக்கு தொடர்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையை கேட்க செய்திருக்க முடிந்திருக்குமே” என கூறியுள்ளார். மேலும் பிரபலங்கள் தங்களை குறித்த பெர்சனல் தகவல்களை எல்லாம் பொதுவெளியில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களே அவதூறு வழக்கும் தொடர்கிறார்கள்.. நீதிமன்றம் என்பது எலோருக்கும் சமமான ஒன்று. அதனால் சமந்தாவின் வழக்கும் வரிசைப்படி முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.