ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் அவரது காதல் கணவர் நாகசைதன்யாவும் சமீபத்தில் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து அறிவிப்பு வெளியான பின்னரும் கூட, அவர்களது பிரிவு எதனால், இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பல யூடியூப் சேனல்களில் தங்களுக்கு தோன்றியபடி செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் இரண்டு டிவி சேனல்கள் மற்றும் 3 யூடியூப் சேனல்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்தார் சமந்தா. இதனை அவசர வழக்காக கருதி முன்னுரிமை தந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் சமந்தாவின் வழக்கறிஞர்..
அதற்கு நீதிபதி, “அவதூறு வழக்கு தொடர்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையை கேட்க செய்திருக்க முடிந்திருக்குமே” என கூறியுள்ளார். மேலும் பிரபலங்கள் தங்களை குறித்த பெர்சனல் தகவல்களை எல்லாம் பொதுவெளியில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களே அவதூறு வழக்கும் தொடர்கிறார்கள்.. நீதிமன்றம் என்பது எலோருக்கும் சமமான ஒன்று. அதனால் சமந்தாவின் வழக்கும் வரிசைப்படி முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.