மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பல வருடங்களுக்கு முன் வெற்றி பெற்ற படத்தை தற்காலத்துக்கு ஏற்ற மாதிரி ரீமேக் செய்வது அவ்வபோது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதன் ரீமேக்கை வேறு ஒரு இயக்குனர் தான் இயக்கியிருப்பார்.. ஆனால் 1995ல் இந்தியில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே' படத்தை அதன் இயக்குனர் ஆதித்யா சோப்ராவே மீண்டும் ரீமேக் செய்து இயக்கவுள்ளாராம்.
ஷாரூக்கான், கஜோல் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 102.50 கோடி ரூபாயை வசூலித்தது. மேலும் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்தநிலையில் 26 வருடங்கள் கழித்து இந்தப்படத்தை தானே ரீமேக் செய்யப்போவதாக கூறியுள்ளார் ஆதித்ய சோப்ரா. இதுபற்றி கடந்த சில வருடங்களாகவே கூறி வந்த ஆதித்ய சோப்ரா, இந்தப்படத்தை முற்றிலும் புதிய குழுவினரை கொண்டு உருவாக்க இருக்கிறாராம்.