என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு செக் குடியரசு. செக் மொழி பேசும் மக்களை கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொலை ஒரு கோடியே 40 லட்சம். இந்த குட்டி நாட்டில் ஆண்டுக்கு 10 திரைப்படங்கள் வரை தயாராகிறது. இந்த நாட்டின் திரைப்பட விழா சென்னையில் இன்றும், நாளையும் (அக்டோபர் 22, 23)நடக்கிறது. இதில் வுமன் ஆன் தி ரன், கொல்யா, என்ஜாய் தி வோர்ல்ட் வித் யூ என்ற புகழ்பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹவோர்கா, சென்னை துணை தூதர் ராம் அருண், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தாகூர் பிலிம் செண்டரில் நடக்கும் இதற்கான ஏற்பாடுகளை செக் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு செய்துள்ளது.