மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? |

ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு செக் குடியரசு. செக் மொழி பேசும் மக்களை கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொலை ஒரு கோடியே 40 லட்சம். இந்த குட்டி நாட்டில் ஆண்டுக்கு 10 திரைப்படங்கள் வரை தயாராகிறது. இந்த நாட்டின் திரைப்பட விழா சென்னையில் இன்றும், நாளையும் (அக்டோபர் 22, 23)நடக்கிறது. இதில் வுமன் ஆன் தி ரன், கொல்யா, என்ஜாய் தி வோர்ல்ட் வித் யூ என்ற புகழ்பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹவோர்கா, சென்னை துணை தூதர் ராம் அருண், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தாகூர் பிலிம் செண்டரில் நடக்கும் இதற்கான ஏற்பாடுகளை செக் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு செய்துள்ளது.




