முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை |

ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு செக் குடியரசு. செக் மொழி பேசும் மக்களை கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொலை ஒரு கோடியே 40 லட்சம். இந்த குட்டி நாட்டில் ஆண்டுக்கு 10 திரைப்படங்கள் வரை தயாராகிறது. இந்த நாட்டின் திரைப்பட விழா சென்னையில் இன்றும், நாளையும் (அக்டோபர் 22, 23)நடக்கிறது. இதில் வுமன் ஆன் தி ரன், கொல்யா, என்ஜாய் தி வோர்ல்ட் வித் யூ என்ற புகழ்பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹவோர்கா, சென்னை துணை தூதர் ராம் அருண், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தாகூர் பிலிம் செண்டரில் நடக்கும் இதற்கான ஏற்பாடுகளை செக் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு செய்துள்ளது.