'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கொரியன் படத்தை காப்பியடித்து மாநாடு படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் கொடுத்துள்ளார். அந்த செய்தி முற்றிலும் தவறானது, வெறும் டிரைலரை வைத்து படத்தை முடிவு செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாநாடு'. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
இதனிடையே இந்த படம் 2017ம் ஆண்டு வெளிவந்த கொரியன் படமான 'ஏ டே' என்ற படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கொரியன் பட நிறுவனம் புகார் அளித்துள்ளதாகவும், அந்த பிரச்னையை தீர்க்க படக்குழு முயற்சித்து வருவதாகவும் செய்திகள் பரவின.
இதை மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார். தினமலருக்கு அவர் அளித்த பேட்டியில், ‛‛முதலில் இப்படி ஒரு செய்தி வெளியானதே முற்றிலும் தவறு. டைம் லூப் என்பது சர்வதேச அளவிலான பொதுவான கதை. கோவை பின்னணியில் அரசியல் களமாக கொண்டு நாங்கள் படம் எடுத்துள்ளோம். வெறும் டிரைலரை வைத்து மட்டும் ஒரு படத்தை எப்படி முடிவு செய்ய முடியும். இது கொரியன் பட காப்பி கிடையாது. எந்த கொரியன் பட நிறுவனமும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. அந்த செய்தியும் தவறானது. இந்த படத்தை நாங்கள் ஆங்கிலத்திலும் டப் செய்து சர்வதேச அளவில் வெளியிட உள்ளோம். காப்பி படமாக இருந்தால் ஆங்கிலத்தில் வெளியிட முடியுமா'' என்றார்.