'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் | ரஜினி, கமல் படத்தை பிலிம் ரோலில் படமாக்கும் நெல்சன் | அறிவித்துவிட்டு 'அப்டேட்' தராத 'ஆசை' | 'எக்கோ' பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ் | பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் |

பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தற்போது தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரக்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்பு அது குணமானது. தற்போது தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அது குணமானதும் இரண்டு தடுப்பூசியும் உரிய இடைவெளியில் போட்டுக் கொண்டேன். ஆனாலும் இப்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்கிறார்.