திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. துக்ளக், ரிக்கி, நம் ஏரியய ஒன் தினா, கிரிக் பார்ட்டி உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனராகி உள்ளினதவர கண்டத்தே, கிரிக் பார்ட்டி, ராமராஜுனா உள்பட பல படங்களை இயக்கினார். அவனே ஸ்ரீமன்நாராயணா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.
தற்போது ரிச்சர்ட் அந்தோணி என்ற பேண்டசி திகில் படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். கார்ம் சாவ்லா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது: ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி படத்தின் 2ம் பாகம் என்றும் இதனை சொல்லலாம். அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்யமானது, பிரமாண்டமானது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல.
இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்தபோது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்த கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.