பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி |

தெலுங்கு நடிகர் சிரஞ்ஜீவியும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடிக்கும் படம் ஆச்சார்யா. படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. கொரடலா சிவா இயக்கும் இந்தப் இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. சண்டை காட்சிகள் சிலவும், ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்று மட்டும் தான் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ராம் சரணும், அவரது மனைவி உபாஷனாவும் கவனித்து வருகின்றனர். இதனால் பவன் கல்யாண், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிகிறது.
ஆச்சார்யாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா அதிகரித்து வருவதால் ஆச்சார்யா படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த ஆண்டு மே மாதம் வெளிவருவதாக இருந்த இந்தப் படம், நவம்பர், அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.




