பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்கு நடிகர் சிரஞ்ஜீவியும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடிக்கும் படம் ஆச்சார்யா. படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. கொரடலா சிவா இயக்கும் இந்தப் இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. சண்டை காட்சிகள் சிலவும், ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்று மட்டும் தான் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ராம் சரணும், அவரது மனைவி உபாஷனாவும் கவனித்து வருகின்றனர். இதனால் பவன் கல்யாண், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிகிறது.
ஆச்சார்யாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா அதிகரித்து வருவதால் ஆச்சார்யா படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த ஆண்டு மே மாதம் வெளிவருவதாக இருந்த இந்தப் படம், நவம்பர், அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.