பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

2026ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகைக்கு வந்த படங்களில் 'பராசக்தி' படம் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்தது. அவ்வளவு வசூலைக் கடந்தாலும் அது லாபமா, சமமா, நஷ்டமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
அதே சமயம் தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு வெளிவந்த படங்களில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து வெளிவந்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படம் 15 நாட்களில் உலக அளவில் 358 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்ல தெலுங்கு பிராந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
சங்கராந்திக்கு வெளியான பிரபாஸின் பான் இந்தியா படமான 'தி ராஜா சாப்' படத்தை விடவும், மற்ற படங்களை விடவும் சிரஞ்சீவி படம் வசூலைக் குவித்து வருவது தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படம் ஓடி வருவதால் எப்படியும் 400 கோடியைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.