தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
சினிமா பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்த மோகன்லாலுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரிஷ்யம் 3 படத்தின் கதாநாயகியான மீனா மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.