சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமா பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்த மோகன்லாலுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரிஷ்யம் 3 படத்தின் கதாநாயகியான மீனா மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.