பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் மற்ற ஆண்களால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து படக்குழுவில் உள்ள முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்தாலும் அதனால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வரலாம் என அது குறித்து பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் அப்படி ஒரு நடிகர் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதை பார்த்த படத்தின் இயக்குனர் அந்த நடிகரை படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்த நிகழ்வும் நடந்து தான் இருக்கிறது.
இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 2018 படத்தின் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் தான். மலையாள திரையுலகில் பெண்கள் அதிக அளவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்படுவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை வரவேற்று கருத்து கூறியுள்ள பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர், ‛‛நான் இயக்கிய 2018 படத்தில் இதே போன்ற ஒரு நடிகர் படத்தில் நடித்த ஒரு நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டபோது அவரை உடனடியாக படத்திலிருந்து தூக்கினேன். அவர் நடித்த காட்சிகளையும் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கினேன். நீங்கள் இப்போது அந்த படத்தை பார்த்தீர்கள் என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒரு கதாபாத்திரத்தின் கன்டினிட்டி மிஸ் ஆகி இருப்பதை கவனிக்க முடியும். அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது” என்று கூறியுள்ளார்.