ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தமிழில் வெளியான 'வேதாளம்' படம், தெலுங்கில் 'போலோ சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் அஜித் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருக்கும் நிலையிலும் சிரஞ்சீவி தனது சம்பளத்தை கண்டிப்புடன் கேட்டு வாங்கினார் என்றும், தயாரிப்பாளர் தனது வீட்டை விற்று சம்பளத்தை கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 10 கோடியை சிரஞ்சீவி திருப்பி கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு சிரஞ்சீவிக்கு 60 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 கோடி வழங்கப்பட்டதாகவும், இரண்டாவது தவணையாக 10 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையாக பெறப்பட்ட 10 கோடி ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.




