பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

தமிழில் வெளியான 'வேதாளம்' படம், தெலுங்கில் 'போலோ சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் அஜித் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருக்கும் நிலையிலும் சிரஞ்சீவி தனது சம்பளத்தை கண்டிப்புடன் கேட்டு வாங்கினார் என்றும், தயாரிப்பாளர் தனது வீட்டை விற்று சம்பளத்தை கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 10 கோடியை சிரஞ்சீவி திருப்பி கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு சிரஞ்சீவிக்கு 60 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 கோடி வழங்கப்பட்டதாகவும், இரண்டாவது தவணையாக 10 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையாக பெறப்பட்ட 10 கோடி ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.