தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

கன்னட திரையுலகில் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். திரையுலகில் நுழைந்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த சிவராஜ்குமார், தற்போது பிற மொழிகளின் பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடித்து விட்ட சிவராஜ்குமார், அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்க இருக்கிறார். நடிகர் பிரித்விராஜ் இயக்க உள்ள படத்தில் தான் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அனேகமாக மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்க உள்ள லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.