2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கன்னட திரையுலகில் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். திரையுலகில் நுழைந்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த சிவராஜ்குமார், தற்போது பிற மொழிகளின் பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடித்து விட்ட சிவராஜ்குமார், அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்க இருக்கிறார். நடிகர் பிரித்விராஜ் இயக்க உள்ள படத்தில் தான் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அனேகமாக மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்க உள்ள லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.