இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள திரை உலகை சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் சீனிவாசன். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன். இவரது தம்பி தயன் சீனிவாசனும் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் ஒசானா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள மார்க்கெட் ஒன்றில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது அங்குள்ள வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினார்கள்.
மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு இழப்பீடாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பிடிவாதம் காட்டினர். வேறு வழியின்றி பணத்தை கொடுத்த பின்னரே படக்குழுவினர் அங்கே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடிந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கனவே நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதியை படக்குழுவினர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.