சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

மலையாள திரை உலகை சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் சீனிவாசன். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன். இவரது தம்பி தயன் சீனிவாசனும் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் ஒசானா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள மார்க்கெட் ஒன்றில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது அங்குள்ள வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினார்கள்.
மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு இழப்பீடாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பிடிவாதம் காட்டினர். வேறு வழியின்றி பணத்தை கொடுத்த பின்னரே படக்குழுவினர் அங்கே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடிந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கனவே நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதியை படக்குழுவினர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.