எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா அல்லது இதே ஆட்சி தொடருமா என்கிற பரபரப்பு நிறைந்த தேர்தலாக கருதப்படுகிறது. அதனால் இந்த தேர்தலில் பலரும் ஆர்வத்துடன் ஓட்டளிப்பதை காண முடிந்தது. திரையுலக பிரபலங்களும் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருவதுடன், மக்களையும் ஓட்டுச்சாவடிக்கை வந்து ஓட்டளிக்க உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காந்தாரா படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தி உள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ரிஷப் செட்டி, “நாம் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதற்காக பெருமைப்பட வேண்டும். மேலும் ஓட்டளிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல நமது பொறுப்பும் கூட. ஒரு நல்ல சமூகத்தை கட்டமைப்பதற்காக ஒவ்வொருவரும் சரியான நபரை தேர்ந்தெடுத்து ஓட்டளிக்க வேண்டியது அவசியமாகும். கர்நாடகாவின் வளமான எதிர்காலத்திற்காக நான் ஓட்டளித்துள்ளேன். நீங்கள் ஓட்டளித்து விட்டீர்களா..?” என்று மற்றவர்களின் ஓட்டளிக்க உற்சாகப்படுத்தியுள்ளார் ரிஷப் ஷெட்டி.