முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா அல்லது இதே ஆட்சி தொடருமா என்கிற பரபரப்பு நிறைந்த தேர்தலாக கருதப்படுகிறது. அதனால் இந்த தேர்தலில் பலரும் ஆர்வத்துடன் ஓட்டளிப்பதை காண முடிந்தது. திரையுலக பிரபலங்களும் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருவதுடன், மக்களையும் ஓட்டுச்சாவடிக்கை வந்து ஓட்டளிக்க உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காந்தாரா படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தி உள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ரிஷப் செட்டி, “நாம் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதற்காக பெருமைப்பட வேண்டும். மேலும் ஓட்டளிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல நமது பொறுப்பும் கூட. ஒரு நல்ல சமூகத்தை கட்டமைப்பதற்காக ஒவ்வொருவரும் சரியான நபரை தேர்ந்தெடுத்து ஓட்டளிக்க வேண்டியது அவசியமாகும். கர்நாடகாவின் வளமான எதிர்காலத்திற்காக நான் ஓட்டளித்துள்ளேன். நீங்கள் ஓட்டளித்து விட்டீர்களா..?” என்று மற்றவர்களின் ஓட்டளிக்க உற்சாகப்படுத்தியுள்ளார் ரிஷப் ஷெட்டி.