ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரை உலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான தசரா படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இதில் இவரது வில்லத்தனம் கலந்து நடிப்பிற்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் மலையாளத்தில் அடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போது ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறும் போது தானும் தனது மனைவியும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ள ஷைன் டாம் சாக்கோ தனது ஏழு வயது மகன் அவனது தாயிடம் தான் வளர்கிறான் என்கிற தகவலையும் கூறினார்.
அது மட்டுமல்ல கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால், அதன்பின்னர் குழந்தைகள் யாரோ ஒருவரிடம் மட்டும் தான் வளர வேண்டும். அவர்கள் அந்த ஒருவரது பக்கத்துக் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்தாலும் தப்பில்லை. அங்கே பத்து நாள், இங்கே பத்து நாள் என மாறி மாறி குழந்தைகள் வளரும்போது தேவையில்லாமல் அவர்கள் குழப்பத்திற்கு ஆளாவார்கள். அம்மா அப்பா இருவரின் வார்த்தை தாக்குதல்களுக்கும் ஆளாவார்கள். அதற்கு பதிலாக யாரோ ஒருவரிடம் தொடர்ந்து வளர்வதுதான் குழந்தைகளுக்கு நல்லது” என்று கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.