ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர். இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட மாத இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்புக்கு என தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களை சந்தித்து வருகிறார் அல்லு அர்ஜுன். சமீப நாட்களாக விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர இருக்கிறது.
இந்த இடைவெளியில் ரசிகர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அல்லு அர்ஜுன். அதில் கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது கைகளில் தூக்கி ஏந்தியபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கூட சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்கள் சந்திப்பின்போது இதேபோன்று ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை தனது கைகளில் தூக்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டது அப்போது இதே போல வைரலானது குறிப்பிடத்தக்கது.