'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து, முதல் படத்திலேயே லைம்லைட்டுக்கு வந்தவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி ஷெட்டி தமிழில் சூர்யா, தனுஷ் ஆகியோருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்கிற படம் மூலமாக மலையாளத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார். ஜித்தின் லால் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் பூஜை காரைக்குடியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் எளிமையாக நடைபெற்றதுடன் அப்படியே படப்பிடிப்பும துவங்கியுள்ளது. இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.