கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து, முதல் படத்திலேயே லைம்லைட்டுக்கு வந்தவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி ஷெட்டி தமிழில் சூர்யா, தனுஷ் ஆகியோருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்கிற படம் மூலமாக மலையாளத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார். ஜித்தின் லால் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் பூஜை காரைக்குடியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் எளிமையாக நடைபெற்றதுடன் அப்படியே படப்பிடிப்பும துவங்கியுள்ளது. இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.