பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி |

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் நேற்று 'நின்ன தான் கேஸ் கொடு' என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். ரதீஷ் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி உள்ளார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தை இயக்கியவர். நேற்று குஞ்சாக்கோ போபன் படம் முதல் காட்சி முடிவடைந்து இரண்டாம் காட்சி தொடங்குவதற்கு உள்ளாகவே இந்தப்படத்தைப் பற்றிய எதிர்மறை பிரச்சாரங்கள் சோசியல் மீடியாவில் துவங்கிவிட்டன.
படம் நன்றாக இல்லை என யாருமே சொல்லவில்லை. அதேசமயம் இந்த படம் இப்போதைய ஆளும்கட்சியை கிண்டலடிக்கும் விதமாக தாக்கும் விதமாக இருக்கிறது என ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் இந்த படத்தை புறக்கணிக்குமாறு சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் குஞ்சாக்கோ போபனோ எந்த அரசையும் எதிர்த்து நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையை மையப்படுத்தியே இந்தப்படம் உருவாகி உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த எதிர்ப்பே ப்ரீ பப்ளிசிட்டி ஆக மாறி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்து மாலை, இரவு காட்சிகளுக்கு தியேட்டர்களில் அதிக அளவு கூட்டத்தை அழைத்து வந்து விட்டது. குஞ்சாக்கோ போபன் படத்திலேயே முதல் நாள் வசூலிலும் பரபரப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படமாக இது இடம் பிடித்துவிட்டது என கேரள தியேட்டர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.




