'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
மலையாள சினிமாவின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் நடிகர்களில் நடிகர்களில் மூன்றாவது நபர் தான் நடிகர் சுரேஷ்கோபி. தற்போது அரசியலிலும் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியலுக்காக சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் சுறுசுறுப்புடன் படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் நடித்து வரும் படங்கள் மற்றும் அவர் புதிதாக ஒப்புக்கொண்டுள்ள படங்கள் பற்றிய அறிவிப்புகளும் அப்டேட்டுகளும் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் சுரேஷ் கோபியின் 254வது படமாக 'ஹைவே-பார்ட் 2' என்கிற படம் உருவாக இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுரேஷ்கோபியே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 1995ல் சுரேஷ்கோபி நடிப்பில் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ஹைவே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் ஆகி இந்த இரண்டு மொழி ரசிகர்களிடையே சுரேஷ்கோபியை ஆக்சன் ஹீரோவாக கொண்டு சேர்த்தது என்றும் சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கிய ஜெயராஜின் டைரக்சனில் அடுத்ததாக சில படங்களில் இணைந்து நடித்த சுரேஷ்கோபி அவரது டைரக்ஷனில் நடித்த களியாட்டம் என்கிற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். கடந்த 2006ல் வெளியான அஸ்வரூதன் என்கிற படத்தில் ஜெயராஜ் டைரக்சனில் நடித்திருந்த சுரேஷ்கோபி கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். பரத் நடித்து தமிழில் வெளியான '4 ஸ்டுடண்ட்ஸ்' மற்றும் சில நேரங்களில் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இயக்குனர் ஜெயராஜ் நன்கு அறிமுகமானவர்தான்.