ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் முன்னணி நடிகர் மோகன்பாபு. இவரது மகன் விஷ்னு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் லட்சுமி மஞ்சு தமிழில் கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறியிருப்பதாவது: எனது நீண்டநாள் கனவு இது. எனது முதல் ஹீரோ தந்தையுடன் இணைந்து நடிக்கிறேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடன் இணைந்து நடிப்பது ஒரு பெரிய விருது பெற்றது போல் இருக்கிறது. இந்த நாளுக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தொடர்ந்து முயற்சித்தால் நம் கனவு ஒரு நாள் நனவாகும், என் விஷயத்தில் அது நடந்திருக்கிறது. என்கிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் சித்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறர். பாலிவுட் இயக்குனர் பிரத்திக் பிரஜோஸ் இயக்குகிறார். டைமண்ட் ரத்னபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சாய் பிரகாஷ் இசை அமைக்கிறார். பிரியதர்சன் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறர்கள். இது ஒரு க்ரைம் த்ரில்லர் வகை படம்.