ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் ஆடுஜீவிதம். புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமினின் நாவலை அதே தலைப்பில் படமாக்குகிறார்கள். அமலாபால், லட்சுமி சர்மா, லீனா, அபர்ணா பாலமுரளி, வினித் சீனிவாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பெரும்பகுதி கதைக்களம் அரேபிய பாலைவனத்தில் நடக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காததால் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது. அப்போது திடீர் கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டதால் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அல்ஜீரியாவில் மாட்டிக் கொண்டனர். பின்னர் இந்திய அரசின் உதவியுடன் தனி விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பை மீண்டும் அல்ஜீரியா மற்றும் ஜோர்டானில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து 4வது கட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் பிளெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் பிப்ரவரி 15ம் தேதி ஜோர்டானுக்கு செல்கிறார்கள். பிருத்விராஜ் மார்ச் முதல் வாரம் செல்வார் என்று தெரிகிறது.