எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் ஆடுஜீவிதம். புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமினின் நாவலை அதே தலைப்பில் படமாக்குகிறார்கள். அமலாபால், லட்சுமி சர்மா, லீனா, அபர்ணா பாலமுரளி, வினித் சீனிவாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பெரும்பகுதி கதைக்களம் அரேபிய பாலைவனத்தில் நடக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காததால் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது. அப்போது திடீர் கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டதால் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அல்ஜீரியாவில் மாட்டிக் கொண்டனர். பின்னர் இந்திய அரசின் உதவியுடன் தனி விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பை மீண்டும் அல்ஜீரியா மற்றும் ஜோர்டானில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து 4வது கட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் பிளெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் பிப்ரவரி 15ம் தேதி ஜோர்டானுக்கு செல்கிறார்கள். பிருத்விராஜ் மார்ச் முதல் வாரம் செல்வார் என்று தெரிகிறது.