நாயகன் - உபேந்திரா
நாயகிகள் - கிறிஸ்டினா மற்றும் பருள் யாதவ்
இயக்குநர் - உபேந்திரா
கன்னட சூப்பர் ஸ்டார் ஏற்கனவே வெற்றி பெற்ற உபேந்திரா படத்தின் இரண்டாம் பாகத்துடன் இம்முறை களமிறங்குகிறார். உபேந்திராவிற்கு தெலுங்கு தேசத்திலும் ஆதரவாளர்கள் உண்டு என்பதால் கன்னட திரைப்படம் உபேந்திரா 2 தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
உபேந்திரா 2 படம் முந்தய பாகத்தில் விட்ட இடத்தில் துவங்குகிறது. எல்லாரும் நீனு (உபேந்திராவை) தேடிக்கொண்டிருக்கிறார்கள், ஒரு தொலைதூர கிராமத்தில் நுவுவாக வசித்து வருகிறார் உபேந்திரா. நாயகனை அங்கே பார்க்கும் பத்திரிக்கை செய்தியாளர் லக்ஷ்மி (கிரிஸ்டினா அக்ஹீவா) நாயகனின் செயல்பாடுகள், நடந்துகொள்ளும் விதம் என எல்லாவற்றையும் பார்த்து காதல் கொள்கிறார். என்ன ஆனாலும் அவனையே மணக்க வேண்டும் என நினைக்கிறாள்.
பிரிதொரு நாளில் நுவு முன்கதை சுருக்கத்தை அறியும் அவள், அவை தனக்கும் சம்பந்தபட்டது என்றும் அறிகிறார். நுவு சொன்ன முன்கதை என்ன?? அவளுக்கு அதில் சம்பந்தம் என்ன?? நாயகியின் காதல் வெற்றி அடைந்ததா?? இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிய நிச்சயம் நீங்கள் தியேட்டருக்கு சென்று தான் ஆக வேண்டும்.
உபேந்திரா தான் படத்தின் மிகப்பெரும் பலம். தனக்கே உரித்தான ஸ்டைலில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளில் ரசிகர்களை ஈர்க்கின்றார். கிரிஸ்டியானவும், தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் .நாயகனின் கதாபாத்திரம் வழியாக பேசப்படும் சில விசயங்கள் நன்றாகவே வேலை செய்திருக்கிறன. படத்தில் பிரச்சனை என்று பார்த்தால், தெளிவாக எடுத்து கொண்ட விசயத்தை சொல்லாது தான். உபேந்திராவின் நோக்கம் என்ன, அவரின் புரிதல் என்ன என்று ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கிளைமேக்ஸிலும் இதே நிலைமைதான். இது போன்ற அதிமேதாவித்தனமான முயற்சியை தவிர்த்திருக்கலாம்.
படத்தின் டெக்னிக்கல் விசயங்களில் எந்த குறைபாடும் இல்லை. இயக்குநராக உபேந்திரா கதை சொல்வதில் சற்றே குழம்பித்தான் போயிருக்கிறார். அதே நேரம் வசனங்கள் மிக நேர்த்தியாக எழுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதி சற்று பொறுமையை சோதிக்கவே செய்கிறது. உங்களுக்கு உபேந்திராவை பிடிக்குமா?? நீங்கள் பொறுமையாக படம் பார்ப்பீர்களா?? இரண்டு கேள்விக்கும் பதில் ஆம் என்றாள் நீங்கள் படம் பார்க்க செல்லலாம்.
உபேந்திரா 2 - சோதனை முயற்சி