திருச்சி அருகே இப்போதும் திருட்டையே தொழிலாக கொண்ட ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை பின்னணியாக கொண்டு ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் கன்னக்கோல். நாடோடிகள் படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்த பரணி இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காருண்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். வி.ஏ.குமரேசன் என்பவர் இயக்குகிறார்.
படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம் திருட்டையே தொழிலாக கொண்டது. வடநாட்டில் சென்று திருடுவார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு அரசு துறைகள் அந்த ஊருக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களை நல்வழிக்கு கொண்டு வந்தது. அதை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கற்பனை கதைதான். ஊரே திருந்திவிட்ட பிறகும் திருந்தாத ஹீரோ உள்ளிட்ட நான்கு பேரை காதலி எப்படி திருத்துகிறாள் என்பது படத்தின் கதை. அதை சீரியசாக சொல்லாமல் சிரிக்க சிரிக்க சொல்கிறோம்.
இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படவில்லை. சிரிக்க வைக்கும் நோக்கத்தில் எடுத்திருக்கிறோம். ஒரு சின்ன மெசேஜும் சொல்கிறோம். கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிறார் டைரக்டர் வி.எ.குமரேசன்.