ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..: தனுஷின் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' டிரைலர் வெளியீடு | பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! |
மலையாள சினிமாவில் இருந்து விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் பானு. மலையாளத்தில் முக்தா என்ற இயற்பெயரில் நடித்து வந்தவரை இயக்குனர் ஹரி தமிழுக்காக பானு என்று மாற்றினார். தாமிரபரணிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த பானு சரியான வாய்ப்புகள் இன்றி கேரளாவுக்கே சென்று விட்டார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாவிட்ட பானு அதன் பிறகு பெரிதாக நடிக்க வில்லை 2017ம் ஆண்டு நடித்த பாம்பு சட்டைதான் அவர் கடைசியாக நடித்த படம்.
5 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த படம் சகுந்தலாவின் காதலன். இந்த படத்தை காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் படங்களை இயக்கிய பி.வி.பிரசாத் இயக்கினார். ஒரு திருடனிடம் தனது சங்கிலியை பறிகொடுத்த பெண் அதனை எப்படி அவனிடம் இருந்து மீட்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. திருடனாக இயக்குனர் பி.வி.பிரசாத்தும், பறிகொடுத்து பெண்ணாக பானுவும் நடித்தனர். தயாரிப்பாளரின் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்த இந்த படம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது.