தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். அவர் நடித்த 'பெல்பாட்டம்' படம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா தவிர மற்ற முக்கிய வட இந்திய மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களுக்கு வரவில்லை. பொதுவாக அக்ஷய்குமார் படம் வெளிவந்தால் ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி வசூலைத்தாண்டி விடும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கடந்த பத்து நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. எதிர்பார்த்த தொகையை விடவும் அது மிகவும் குறைவுதான். இதற்கு மேலும் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
பட வெளியீட்டிற்கு முன்பு படத்தைத் தியேட்டர்களில் வெளியிட தாங்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவும், இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலித்தாலே அது 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு சமம் என்றும் அக்ஷ்ய்குமார் தெரிவித்திருந்தார்.
அக்ஷய்குமார் படத்திற்கே இந்த நிலைமை என்றால் தென்னிந்தியாவில் வெளியாகும் படங்களின் வசூல் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என திரையுலகில் கவலைப்படுகிறார்கள். அதனால், மக்கள் முழுவதுமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் பல பெரிய படங்களை பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.