வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

சந்தானம் நடித்த வாலிப ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நுஷ்ரத் பரூச்சா. பாலிவுட் நடிகையான இவர் தாஜ்மஹால் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஆகாஷ் வாணி, சோனு கீ திட்டு கி ஸ்வீட்டி, ஜெய் சந்தோஷி மா உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். தற்போது ராம்சேது, சோரி, ஹர்டங் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படப்பிடில் கலந்து கொண்ட நுஷ்ரத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுஷ்ரத் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் அவர் தனது உடல்நிலை குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு மன அழுத்த பிரச்சினை இருக்கிறது. இதற்கான நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இதனால் மன அழுத்தமும், பதற்றமும் அதிகமாகி மயங்கி விழுந்தேன்.
எனக்கு கொரோனா உள்ளிட்ட வேறு எந்த உடல் பிரச்சினையும் இல்லை. தற்போது ஓய்வில் இருக்கிறேன். டாக்டர்கள் 15 நாள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். என் பெற்றோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.