ஜனநாயகன் திரைப்படத்தின் 5 நிமிட காட்சி 'லீக்' | 21 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸாகும் விஜய்யின் சிவகாசி | ஒடிடியை கலக்க வரும் 'தாய் கிழவி' : இந்த வார லிஸ்ட் | தமிழ் சினிமாவின் ‛துரந்தர்', ‛மிஸ்டர். எக்ஸ்' : இயக்குனர் மனு ஆனந்த் | என்னை ஏமாற்றிய லோகா படக்குழு : மம்முட்டி | செல்வராகவனுடன் நடித்தபோது பயத்தில் நடுங்கினேன் : நடிகை ஹேமா | துரந்தர் 2 ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது | சிறை பின்னணியில் உருவாகும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு | ரஜினியின் ‛ஜெயிலர் 2' தள்ளிப்போகிறதா? | 'நீளிரா' படத்தை உயிர்த்தெழச் செய்யுங்கள்: கார்த்திக் சுப்பராஜ் உருக்கமான வேண்டுகோள் |

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். லகான், தங்கல், பிகே என இவர் நடிக்கும் படங்களுக்கு மொழியை கடந்து ரசிகர்கள் ஏராளம். ரீனா தத்தை முதலில் திருமணம் செய்து கொண்டார் நடிகர் அமீர் கான். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2005-ம் ஆண்டு கிரண் ராவை அமீர் கான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இன்று அமீர் கான் - கிரண் ராவ் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது : 15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே... இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது.
நாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் பிரிந்தாலும் தொடர்ந்து திரைத்துறையிலும், சமூகசேவையிலும், எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும் இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு அல்ல. அது இன்னொரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கம். எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.