புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்தும் மற்ற படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக லைகா நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க விரும்பிய கரண் ஜோஹர், லைகா தயாரித்த 2.0 படத்தை இந்தியில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது லைகாவிடம் இருந்து ஒதுங்கி, ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டுள்ளார் கரண் ஜோஹர். இதனால் லைகா நிறுவனம் டென்சன் ஆனதாக தெரிகிறது.
தற்போது அக்சய் குமார் நடித்து வரும் ராம் சேது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக லைகா நிறுவனம், தன்னை இணைத்துக் கொன்டதே கரண் ஜோஹர் சொல்லித்தானாம். ஆனால் அவர் தங்களிடமிருந்து விலகியதால், தற்போது ராம்சேது பட மெயின் தயாரிப்பளருக்கு பணம் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறதாம் லைகா. இதனால் அக்சய் குமாருக்கு கொடுக்கப்பட்ட 30 கோடி ரூபாய் செக் ஒன்று, வங்கியிலிருந்து பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.. ஆனால் அக்சய் குமார் தரப்பிலோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என மறுக்கிறார்களாம்.